முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க எம்.பி யுமான ஜெகத்ரட்சகன் மீதான மோசடி புகார் தொடர்பாக, அவரது மகன் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க எம்.பி யுமான ஜெகத்ரட்சகன் மீதான மோசடி புகார் தொடர்பாக, அவரது மகன் சந்தீப் ஆனந்த்
சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி என்.சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது
சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன்,
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, அவரது மகன், மகள், மைத்துனர் என ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பியும் யாருமே விசாரணைக்கு ஆஜராக வில்லை என குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த
ஜெகத்ரட்சகன் சார்பில் வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதாகவும், ஜெகத்ரட்சகன் நேற்றைய தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதும் அவரை தொடர்ந்து வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதன் காரணமாகவே விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்தார்

இவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு குறித்த விசாரணைக்கு .ஜெகத்ரட்சகன் சார்பாக அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைக்கலாம் எனவும், 1965ல் போர்ஜரி நடந்ததாக கூறப்பட்டு FIR தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 1995ம் வருடம் பங்குகளை வாங்கிய ஜெகத்ரட்சகன் மீது எவ்வாறு குற்றச்சாட்டு கூற இயலும் என்றும், புகார் கொடுத்த தாசன் சிவில் நீதிமன்றத்தை நாடாமல் குற்ற வழக்கு தொடுத்தது எப்படி எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 1995ம் வருடத்திற்கு பின் உண்டான கைவசம் உள்ள ஆவணங்களை ஒப்படைக்குமாறும், ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி கட்டாயப்படுத்த போலீசாருக்கு அதிகாரமில்லை எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
மேலும், ஜெகத்ரட்சகன் வழக்கு குறித்துல் சி.பி.சி.ஐ. டி போலீசார் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

You may also like...