ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கும், தெற்கு ரயில்வே-வுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே துறை ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கும், தெற்கு ரயில்வே-வுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கும், தெற்கு ரயில்வே-வுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில், ராணுவம், துணை ராணுவப்படை வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஊடகத்தினர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்படுகிறது.

இதில் ரயில்வே தொழிலாளர்க்ள் சேர்க்கப்படவில்லை என்றும், அவர்களையும் சேர்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதுரை கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கேரளாவில் ரயில்வே துறையினருக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ஓட்டுனர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் வாக்கு செலுத்த விடுப்பு எடுக்க இயலாது எனவும், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரயில்வே துறை ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டதால், மக்களவை தேர்தலிலும் தபால் வாக்களிக்க அனிமதிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் பரிசீலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், தபால் வாக்கு பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், தபால் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பிக்க மார்ச் 25ம் தேதி கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதிக்க இயலாது எனவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, ரயில்வே துறை தரப்பில் தான் தவறு எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தெற்கு ரயில்வேவுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்

You may also like...