29/03, 08:15] sekarreporter1: https://youtu.be/24xNZXZjqhQ?si=1Ivv43sEWpXbMCAA[29/03, 08:49] sekarreporter1: புதிய தலைமைச் செயலகம் கடியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி
[29/03, 08:15] sekarreporter1: https://youtu.be/24xNZXZjqhQ?si=1Ivv43sEWpXbMCAA
[29/03, 08:49] sekarreporter1: புதிய தலைமைச் செயலகம் கடியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய அரசின் மனு மற்றும் வாபஸ் பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த 2006-11ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு, விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து முந்தைய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை இந்த வழக்கில் இணைக்கக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.