5 judges biodata நீதிபதிகள் வாழ்க்கை குறிப்பு

நீதிபதி ஏ.ஏ.நக்கீரன்

1963 மே 10ல் பிறந்தவர். 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர்.

பொன்னேரி, திருச்சி, அம்பத்தூர், நான்குனேரி, உளுந்தூர்பேட்டை, செய்யாறு, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், உதகமண்டலம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி உள்ளார்

2020ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.

===========

நீதிபதி என். மாலா

பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மற்றும் கேசரி பள்ளிகளில் படித்தவர்

தந்தை : மகாகவி ஸ்ரீ ஸ்ரீ

தாய் : சரோஜா ஸ்ரீ

சட்டப்படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படித்து, 1989-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக பதவி செய்து, 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருந்து வருகிறார்

ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் புதுச்சேரி பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.), காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார்

2020-ம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு பிளீடராக நியமிக்கப்பட்டார். அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமை பெற்றவர்

ராதா ரமணா என்ற கணவரும், இரு மகன்களும் உள்ளனர்

2022ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.

==========

நீதிபதி எஸ். சௌந்தர்

தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையில் 1971ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி பிறந்தவர்

இவரது தந்தை ஆர். சிவபுண்ணியம் மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரிந்தவர். தனது மகன் சவுந்தர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து வழக்கறிஞர் தொழிலை கைவிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பில் கணித படத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளி கல்வியை மயிலாடுதுறையில் முடித்தவர்

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேதர் சட்டக் கல்லுரியில் முதுகலை சட்டப்படிப்பை முடித்து, 1993ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார்

சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஏ.எஸ். வெங்கடாசலமூர்த்தி, தமிழகத்தில் வழக்கறிஞராக இருந்தபோது ஜூனியராக பணியாற்றியுள்ளார்

இவர் தனியாக தொழில்புரிந்த போது நடத்திய 670 வழக்குகள் பல்வேறு சட்ட புத்தகம் மற்றும் இதழ்களில் இடம்பெற்றுள்ளன

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக இருந்தவர்

சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்திலும், சில வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உதவும் நபராகவும் இருந்துள்ளார்

இளநிலை சிவில் நீதிபதிகளாக தேர்வானவர்களுக்கு நீதித்துறை பயிற்சி மையத்தில் வகுப்புகளை எடுத்த அனுபவம் கொண்டவர்

பிருந்தா என்கிற மனைவியும், சச்சின் என்கிற மகனும் உள்ளனர்.

2022ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.

===========

நீதிபதி சுந்தர் மோகன்

1969ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி சுந்தர் – சுப்புலட்சுமி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தந்தை வழக்கறிஞர் தாய் ஆசிரியர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1991ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார்.

மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனிடம்
இளவலாக பணியை தொடங்கிய நீதிபதி சுந்தர் மோகன் குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.

===========

கே.குமரேஷ் பாபு

சென்னையில் பிறந்தவர். தந்தை கபாலி சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதல் பட்டதாரியான இவர் பள்ளிப்படிப்பை சென்னையிலும் சட்டப்படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முடித்து 1993-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்த மூத்த வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் ஜூனியராக வழக்கறிஞர் பணியை தொடங்கினர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ரீட் மற்றும் சமரச தீர்ப்பாய வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் 2001 முதல் 2002 வரை அரசு வழக்கறிஞராகவும் 2020 முதல் 2021 வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.

===========

You may also like...