சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும் கோயில் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது எனவும்,
கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு அறிவித்த புதிய விதிகளை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (22ம் தேதி) தீர்ப்பு அளித்துள்ளது. . தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில், விதி 7 ஆனது 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதி 9 ஆனது எவ்வாறு அவர்கள் தேர்ந்து...