Sc senior advts our judges congrats. மக்கள் நீதிபதி கிருபாகரன் மக்களுக்கு சேவையாற்ற தொடங்கிவிட்டார்சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் , வி.பார்த்திபன், எஸ்.தமிழ்வாணன், என்.கிருபாகரன் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து

உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 47 நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றி ஓய்வு பெறும் நீதிபதிகள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் மீண்டும் வழக்கறிஞராக பணியாற்றலாம். அவ்வாறு அவர்கள் வழக்கறிஞராக பணியாற்ற விரும்பினால் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பார்கள். தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு அதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து அளிக்கப்படும்.

அந்த வகையில் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த எஸ்.முரளிதர், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் , வி.பார்த்திபன், எஸ்.தமிழ்வாணன், என்.கிருபாகரன் ஆகியோர் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்தனர்.

இதனையடுத்து, கிருபாகரன், முரளிதர் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற 47 நீதிபதிகளுக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

You may also like...