உறுப்பினர் வி. கண்ணாதாசன், பாதிக்கப்பட்ட மாரியம்மாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார். பின்னர் அந்த தொகையை உதவி ஆய்வாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு தலைமை காவலர்களிடம் இருந்தும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்து கொள்ள வேண்டுமெனவும், மூவர் மீதும் ஒழுங்கு நவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளச் சாராயம் விற்றதாக கூறி பெண்ணை அடித்து மானபங்கப்படுத்திய மூன்று காவல்துறையினர் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த ஆலங்குளம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், தலைமை காவலர்கள் ஜான்சன், சசிகுமார் உள்ளிட்ட காவல்துறையினர், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் ஆலங்குளத்தில் உள்ள மாரியம்மாள் என்பவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கள்ளச்சாராயம் விற்பதாக கூறி சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.

அப்போது வீட்டிலிருந்த பொருட்களை தூக்கி வீசியதுடன், குழந்தைகளின் சிகிச்சைக்காக வைத்திருந்த 7 ஆயிரத்து 500 ரூபாயை எடுத்துக்கொண்டு, அவரை அடித்து இழுத்து சென்று மானபங்கம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

கை,கால் என உடலில் பல காயங்கள் ஏற்படுத்தியதால் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5 நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். அதன் பின் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதில் விசாரணை நடத்திய உறுப்பினர் வி. கண்ணாதாசன், பாதிக்கப்பட்ட மாரியம்மாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார். பின்னர் அந்த தொகையை உதவி ஆய்வாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு தலைமை காவலர்களிடம் இருந்தும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்து கொள்ள வேண்டுமெனவும், மூவர் மீதும் ஒழுங்கு நவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...