கோவில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், பக்தி என்பது எதுவுமில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. navj

கோவில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், பக்தி என்பது எதுவுமில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடக்க உள்ளதாகவும், இந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கோவில் பரம்பரை அறங்காவலர் தங்கராசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில், கோவில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை உள்ளதாகவும், தாசில்தாரர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வை எட்ட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை ஏற்படுவது தொடர்பாக தினந்தோறும் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன எனத் தெரிவித்தார்.

அமைதி, மகிழ்ச்சிக்காக மக்கள் கோவிலுக்கு வழிபாடு நடத்தச் செல்கின்றனர். ஆனால் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்த நீதிபதி, கோவில் திருவிழாக்கள், யார் பலம் வாய்ந்தவர்கள் என நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், உண்மையான பக்தி இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இது கோவில் திருவிழாக்களின் நோக்கத்தையே வீழ்த்தி விடுவதாக தெரிவித்த நீதிபதி, இதுபோல வன்முறைகள் வெடித்தால் கோவில்களின் இருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. கோவில்களை மூடிவிடலாம் எனவும் காட்டமாக கூறியுள்ளார்.

இதுபோன்ற பிரச்னைகளுக்காக காவல் துறையினர், வருவாய் துறையினரின் நேரம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி, ருத்ர மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் வசம் விட்டு விடுவதாகவும், ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கோவில் திருவிழாவையும் நிறுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார். இந்த வழக்கில்

கோவில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், பக்தி என்பது எதுவுமில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடக்க உள்ளதாகவும், இந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கோவில் பரம்பரை அறங்காவலர் தங்கராசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில், கோவில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை உள்ளதாகவும், தாசில்தாரர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வை எட்ட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை ஏற்படுவது தொடர்பாக தினந்தோறும் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன எனத் தெரிவித்தார்.

அமைதி, மகிழ்ச்சிக்காக மக்கள் கோவிலுக்கு வழிபாடு நடத்தச் செல்கின்றனர். ஆனால் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்த நீதிபதி, கோவில் திருவிழாக்கள், யார் பலம் வாய்ந்தவர்கள் என நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், உண்மையான பக்தி இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இது கோவில் திருவிழாக்களின் நோக்கத்தையே வீழ்த்தி விடுவதாக தெரிவித்த நீதிபதி, இதுபோல வன்முறைகள் வெடித்தால் கோவில்களின் இருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறது. கோவில்களை மூடிவிடலாம் எனவும் காட்டமாக கூறியுள்ளார்.

இதுபோன்ற பிரச்னைகளுக்காக காவல் துறையினர், வருவாய் துறையினரின் நேரம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி, ருத்ர மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் வசம் விட்டு விடுவதாகவும், ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கோவில் திருவிழாவையும் நிறுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.for police add pp a damodaran argued

You may also like...