திருநங்கை Like/ நீதிபதி கேள்வி/

குழந்தை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து உதவி குடியேற்றத் துறை அதிகாரியான திருநங்கை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், தத்தெடுப்பு ஆணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் குடியேற்றத் துறை அதிகாரியாக பணிபுரியும் திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த மனுவில், பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க, குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து டில்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், திருநங்கை என்ற காரணத்தை கூறி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து, தனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருக்கிறார்.

தத்தெடுப்பதில் சிறார் நீதி சட்டம், எந்த பாலின பாகுபாட்டையும் தெரிவிக்கவில்லை என்றும், குழந்தையை நல்ல முறையில் வளர்க்க கூடியவராக இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், தான் அரசுப் பணியில் உள்ளதால் குழந்தையை சிறந்த முறையில் வளர்க்க முடியும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு ஜூன் 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், மத்திய தத்தெடுப்பு ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...