Chief bench Case against dmk PIL வருமா? ஒரு லட்சம் ரூபாயை டிபாசிட் செய்யுங்க?

மேம்பால முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடர அளித்த அனுமதியை திரும்பப் பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த கோவையைச் சேர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில், 115 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கடந்த 2001ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரணை செய்ய ஒப்புதல் வழங்கி 2005ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின், 2006ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின், ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து 2005ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, நீதித்துறை மீதான நம்பிக்கையை கேலிக்கூத்தாக்கும் வகையில், வழக்கு தொடர்வதற்கான அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளதால், இதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்து, முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை உரிய நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஏப்ரல் 25ம் தேதிக்குள் ஒரு லட்சம் ரூபாயை டிபாசிட் செய்யும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

You may also like...