State pp Ginna urgent letter to DGP

 

வழக்குகள் குறித்த முழு விவரங்கள் தெரிந்த காவல்துறையினரை மட்டுமே உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, தமிழக டி.ஜி.பி.க்கு, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா urgent கடிதம் அனுப்பியிருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்காக, ஆஜராகியிருந்த காவலர், முறையான தகவல்களை வழங்க முடியாமல் தடுமாறியதைச் சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஏற்கனவே இதுகுறித்து பிறப்பித்த உத்தரவுகளுக்கு செவி சாய்க்கவில்லை என அதிருப்தி தெரிவித்ததுடன், வழக்கு பற்றிய தகவல்கள் தெரிந்த காவலர்களை மட்டுமே அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு விவரங்களை தெரிவிக்க அனுப்பும்படி டிஜிபி-யை அறிவுறுத்தும்படி, தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை மேற்கோள் காட்டி, வழக்கு தொடர்பான முழு விவரங்கள் தெரிந்த அதிகாரிகளை அனுப்பி வைக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தக் கூறி, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

You may also like...