Author: Sekar Reporter
Smsj உத்தரவில், குடிமக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கத்துடனே, பொது ஊழியர்களின் செயல்திறனை சோதிக்கும் நோக்கில் சில தகுதித் தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகள் அரசால் நடத்தப்படுகின்றன என்றும், தவறான முறையில் அனுதாபம் காட்டுவது அல்லது மென்மையான போக்கை கடைபிடிப்பது என்ற முடிவை நீதிமன்றங்கள் எடுத்தால், அப்படிப்பட்டவர்களின் திறமையின்மையில் பங்களிப்பதாகிவிடும் என்றும், நீதிமன்றங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் புதிய வழக்கு தொடரும் நடைமுறைகளை சில வழக்கறிஞர்கள் பரிந்துரைப்பதை தடுக்க, உயர் நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
பொது ஊழியர்களின் செயல்திறனை சோதிக்கும் நோக்கில் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் தகுதி பெறாதவர்களுக்கு அனுதாபம் காட்டுவதும், மென்மையான போக்கை கடைபிடிப்பதும், திறமையின்மைக்கு நீதிமன்றமே துணை நிற்பதாகிவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுஜாதா மற்றும் அருள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் 2007ஆம்...